Thursday 19 September 2013

தொடரை கைப்பற்றுமா இந்தியா ஏ?

தொடரை கைப்பற்றுமா இந்தியா ஏ?

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணியுடன் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி வியாழக்கிழமை மோத உள்ளது.
இந்தியா ஏ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு இடையே மூன்று ஒரு நாள் ஆட்டத்தொடர் பெங்களூரில் நடைபெற்று வருகின்றன.
முதல் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியும், 2ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணியும் வெற்றிப் பெற்றன. இந்நிலையில் 3ஆவது மற்றும் இறுதி ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இரு அணி வீரர்களும் தொடரை கைப்பற்றும் நோக்கத்துடன் விளையாடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும்.
மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணியில் கார்டர், பௌல், கும்மின்ஸ் போன்றோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியா ஏ அணியில் கேப்டன் யுவராஜ் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பந்துவீச்சிலும் வினய்குமார் மட்டுமே தொடர்ந்து விக்கெட் எடுத்து வருகிறார். கடந்த ஆட்டத்தில் பீல்டிங் சொதப்பலாக இருந்ததை யுவராஜ் ஒப்புக்கொண்டார். எனவே, இந்த ஆட்டத்தில் அந்த தவறுகளை திருத்தி விளையாடினால் இந்தியா ஏ அணி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

 

No comments:

Post a Comment