Thursday 19 September 2013

சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று ஒடாகோ அணிக்கு 2-வது வெற்றி

சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று ஒடாகோ அணிக்கு 2-வது வெற்றி

 

சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று ஆட்டத்தில் கந்துரதா மரூன்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒடாகோ அணி வீழ்த்தியது. இதன்மூலம் தகுதிச்சுற்றில் ஒடாகோ அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் விளையாட தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கந்துரதா மரூன்ஸ் (இலங்கை) மற்றும் ஒடாகோ (நியுசிலாந்து) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஒடாகோ அணி டாஸ் வென்று, பீல்டிங்கை தேர்வு செய்தது. கந்துரதா மரூன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தரங்கா மட்டும் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
அதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஒடாகோ அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த டென் டெஸ்சேட் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.
இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் ஒடாகோ அணி 18 ஓவரிலேயே 4 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் தகுதிச்சுற்றுப் போட்டியில் தொடர்ந்து 2ஆவது வெற்றியை அந்த அணி பதிவு செய்தது.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

news:dinamani.com

No comments:

Post a Comment