வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் வந்தாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிக்கு மத்திய அரசு கேள்வியெழுப்பியுள்ளது. இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே மத்திய அரசு அனுப்பிய கேள்விகளுக்கு அக்கட்சி இன்னும் பதிலளிக்கவில்லை என்றார்.
இதனிடையே இந்த புகார் குறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தாங்கள் குற்றவாளி என்றால் இரட்டை தண்டனையை ஏற்க தயாராக இருக்கின்றோம். வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் இருந்து பணம் பெறுவது குற்றமல்ல. இது குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம் என்றார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து முறைக்கேடாக பணம் வந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி கட்சி வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
website:www.dinamani.com
No comments:
Post a Comment