Thursday 31 October 2013

ஃபோனில் பேசிப் பேசி காதல் வளர்க்கும் மன்மதன்


ஃபோனில் பேசிப் பேசி காதல் வளர்க்கும் மன்மதன்

 

ஃபோனில் பேசிப் பேசி சிம்பு காதல் வளர்க்கப் போகிறாராம்.
சிம்பு, இப்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இரவும் பகலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் சிம்புவின் நண்பனாக சந்தானத்துடன் சேர்ந்து சூரியும் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சிம்பு எப்போதும் ஃபோனில் பேசிக்கொண்டிருப்பது மாதிரியான ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம்! இப்படி ஃபோனில் பேசப் பேச அப்படியே அவரது காதலும் வளருமாம்! இந்த தகவலை சிம்புவே டுவீட் செய்திருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் இந்தப்படத்தை சிம்புவே தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறாராம்.
அதைவிட முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். படத்தின் நாயகி யார் என்று இன்னும் முடிவாகாத நிலையில் சிம்பு யாருடன்தான் ஃபோனில் பேசுகிறார் எனத் தெரியவில்லை.
 keyword: Tamil News Paper | online tamil news

No comments:

Post a Comment