Monday 2 December 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவோம் : விஜயகாந்த் வலியுறுத்தல்


மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் டிசம்பர் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உடல் உறுப்புகளில் குறைபாடுகள் கொண்டு வாழ்ந்து வருகின்ற மாற்றுத் திறனாளிகள் மீது அக்கறை செலுத்தி, அவர்கள் அனைவரும் நம்மில் ஒருவராகத்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காகத்தான் உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் அவர்களின் துன்பங்கள் நீங்கி எல்லா வளமும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும் அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அரசியல் இயக்கங்களிலே தேமுதிகவில் மட்டும்தான் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி அமைப்பை உருவாக்கி, அவர்களும் அரசியலில் சம உரிமை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சமுதாயத்தில் உள்ள நாம் அனைவரும் நம்முடைய சக்திக்கேற்றவாறு உதவி செய்வதை நம்முடைய இலட்சியமாக கொள்ள வேண்டும். இந்த உணர்வினை பொதுமக்கள் அனைவருக்கும் உண்டாக்குவதே இந்த உன்னத நாளின் குறிக்கோள் ஆகும். ஆகவே மாற்றுத் திறனாளிகளும் நம்மைப் போலவே வாழ்வதற்கு உரிய சூழ்நிலையை உருவாக்குவோம் என்ற சூளுரையோடு எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை இந்த நன்னாளில் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார்.

Friday 29 November 2013

மின் உற்பத்தி: காங்கிரஸ் - திமுக கூட்டுச் சதி என்பதை நிரூபிக்க முடியுமா?


"மின் உற்பத்தியைக் குறைக்க காங்கிரஸ் - திமுக கைகோர்த்து கூட்டுச் சதி செய்கிறது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதை, "அவரால் நிரூபிக்க முடியுமா?' என்று திமுக தலைவர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மின்வெட்டுப் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில்தான் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன என்று முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். இது சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு முதல்வராக இருப்பவர் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்.
மின் உற்பத்தியை எந்த அரசும் சதி செய்து குறைக்க முன் வராது. அதற்கு யாரும் துணை போக மாட்டார்கள்.
மின் உற்பத்தியைக் குறைக்கக் கூறி, மத்திய அரசிடம் யாராவது கேட்க முடியுமா?
மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் ஆண்டுதோறும் மின் தேவை குறைவாக உள்ள மழைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளால்தான் மின் உற்பத்தி குறையும்.
இந்தப் பராமரிப்பு பணி என்பதும் திடீரென செய்யப்படுவதில்லை.
ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 20 நாள்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காகவே மின் உற்பத்தி நிறுத்தப்படும்.
நிலக்கரி தட்டுப்பாடு: மின்சாரம் தயாரிக்கத் தேவையான நிலக்கரி மற்றும் நாப்தா ஆகியவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும். தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வடசென்னை, மேட்டூர் மின் நிலையங்களுக்கு 90 லட்சம் டன் நிலக்கரி தேவை. மத்திய அரசு 37 லட்சம் நிலக்கரிதான் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது.
தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை வடஇந்தியாவில் உள்ள இரண்டு சுரங்கங்களில் வெட்டி எடுத்துக்கொள்ள மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சத்தீஸ்கரில் சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் ஒடிசா மாநிலத்தில் மந்தாகிணி சுரங்கப் பணியின் முன்னேற்றத்தில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டவில்லை. அதனால்தான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.
நிரூபிக்கத் தயாரா? மின் உற்பத்தியில் காங்கிரஸ் - திமுக கைகோர்த்து தமிழக மக்களைப் பழிவாங்குவதாக பெரிய குற்றச்சாட்டை முதல்வர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சவால் விட்டுக் கேட்கிறேன்.
மின் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி நானோ (கருணாநிதி) திமுகவினரோ மத்திய அரசில் உள்ளவர்களிடம், மத்திய அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களிடமோ பேசியதாக ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா? அதற்கு அவர் தயார்தானா என்று கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

Thursday 28 November 2013

மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி


தமிழகத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டில்  அண்மையில் பெய்த மழையின் காரணமாக,  31.10.2013 அன்று  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த  சுந்தரம் மகன் சக்திவேல், மின்சாரம் தாக்கியதில்  உயிரிழந்தார்.
1.11.2013 அன்று மதுரையைச் சேர்ந்த சங்கையா மனைவி தில்லையம்மாள்; 4.11.2013 அன்று விழுப்புரம் மாவட்டம், நவமால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன் மகன் நாகேஸ்வரன்;  நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரபாணி மனைவி பானுமதி; திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியக்காள்; அதே மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மகன் பெரியண்ணன் - ஆகியோர்  இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். 
10.11.2013 அன்று கடலூர் மாவட்டம், சான்றோர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த  கோவிந்தராஜ் மனைவி சாந்தி; 16.11.2013  அன்று  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜி என்கிற விஜியா சாமுண்டீஸ்வரி; விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சுனன்   மனைவி அய்யம்மாள் ஆகியோர்  வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
16.11.2013 அன்று  விழுப்புரம் மாவட்டம்,  திண்டிவனம் வட்டம், மரக்காணம் கிராமத்தைச் சேர்ந்த அரிராமர் மகன் சதீஷ்குமார் என்கிற ஏழுமலை மீது  மரம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Readmore:www.dinamani.com

Wednesday 27 November 2013

ஆர்யா, சந்தானத்துடன் இணையும் ராஜேஷ்


இயக்குனர் ராஜேஷ் - நடிகர் ஆர்யா கூட்டணி மீண்டும் இணைகிறது.
‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இயக்குனர், அடுத்தும் மாபெரும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜேஷ் இயக்கிய ‘அழகுராஜா’ திரைப்படம் மோசமான தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வி இயக்குனர் ராஜேஷை ரொம்பவே பாதித்து விட்டதாகத் தெரிகிறது.
அதனால், ராஜேஷ், தனது அடுத்த படத்தை மீண்டும் பழையபடியே வெற்றிப்படமாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிட்டார். டைரக்டர் ராஜேஷ். எம், ஆர்யா, நயன்தாரா, சந்தானம் கூட்டணியில் வந்த பாஸ் என்கிற பாஸ்கரன் செம ஹிட் படம். இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
ராஜேஷின் ஆஸ்தான நகைச்சுவை நடிகர் சந்தானமும் ஆர்யா நடிக்கும் படத்தில் இருக்கிறாராம். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் ஆர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல், தனது 'தி ஷோ பீப்புள்' (The Show People) நிறுவனம் மூலம் படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

Readmore:www.dinamani.com

Monday 25 November 2013

மின் தட்டுப்பாடு : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தில் திடீரென ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழகத்தில் நவம்பர் மாதம் எதிர்பாராத மற்றும் திடீரென ஏற்பட்ட மின் தட்டுப்பாடு குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
2011ஆம் ஆண்டு நான் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் சுமார் 4000 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது, தமிழகத்துக்கு வரும் மின் பரிமாற்றத் தடங்களை அதிகரித்து, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற வழி செய்யுமாறு உங்களுக்கு கோரிக்கை வைத்தேன். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. எனினும், தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, மின் தட்டுப்பாட்டை குறைத்து வந்தது.
நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லாத நிலை இருந்தது. இதனால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தன.
ஆனால், திடீரென தமிழகத்தில் மின் நிலைமை மோசமடைந்தது. மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்தது. சில மின் உற்பத்தி அலகுகளில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடை பட்டது. சென்னை மின் உற்பத்தில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதுபோன்று ஒரே நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவங்களால், தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை எற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனை தவிர்க்க, தமிழக மக்களின் நலனுக்காக, தமிழகத்தில் உள்ள மத்திய நிறுவனங்களின் கீழ் வரும் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியை அதிகரித்து, தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க உதவிடுமாறு உத்தரவிட வேண்டுகிறேன்.  இந்த பிரச்னையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தால், தமிழகம் இருளில் மூழ்கும் அபாயத்தில் இருந்து காக்கலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
Readmore:www.dinamani.com

திருச்சியில் வழக்குரைஞர்கள் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு

First Published : 25 November 2013 12:48 PM IST
திருச்சியில் வழக்குரைஞர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். திருச்சி நீதிமன்றத்தின் முன்பு 300க்கும் மேற்பட்டோர் மேற்கொண்ட இந்த சாலைமறியலால் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் சுமார் 45 நிமிடங்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்குரைஞர்கள் ஆரோக்கியதாஸ், பொன்முருகன், செல்லத்துரை இவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த சாலைமறியல் நடைபெற்றது.
அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் உரிய தீர்வு காணப்படும் என்றும் கூறப்பட்டதை அடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

Readmore:www.dinamani.com

Friday 22 November 2013

ஏற்காடு இடைத்தேர்தல்: நவம்பர் 28-இல் முதல்வர் பிரசாரம்


இடைத்தேர்தல் நடைபெறும் ஏற்காடு தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 28-ஆம் தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.
ஏற்காடு தொகுதியில் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு  அதிமுக வேட்பாளர் பி.சரோஜா உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக இடையே நேரடியான போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு பெரிய கட்சிகளைத் தவிர இங்கு போட்டியிடும் 9 வேட்பாளர்களும் சுயேச்சைகள்.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் ஏற்கெனவே தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பயண விவரத்தை அதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அதன் விவரம்:
1. மின்னாம்பள்ளி - பேசும் இடம் (வழி: காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம்.பெருமாபாளையம், டோல்கேட்)
2. வெள்ளாளகுண்டம் பிரிவு - பேசும் இடம் (வழி: காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி பிரிவு)
3. வாழப்பாடி பஸ் நிலையம் - பேசும் இடம் (வழி: பேளூர் சாலைப் பிரிவு, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி)
4. பேளூர் - கருமந்துறை பிரிவு சாலை, எம்.ஜி.ஆர்.சிலை அருகில் - பேசும் இடம் (வழி: பள்ளத் தாதனூர், நடுப்பட்டி)
5. நீர்முள்ளிக்குட்டை - பேசும் இடம் (வழி: ராஜாபட்டினம், பூசாரிப்பட்டி, அனுப்பூர் பிரிவு)
6. கூட்டாத்துப்பட்டி - பேசும் இடம் (வழி: சர்க்கார் நாட்டார் மங்கலம், ஏ.என்.மங்கலம், செல்லியம்பாளையம், குள்ளம்பட்டி பிரிவு)
7. வலசையூர் - பேசும் இடம் (வழி: ராமர் கோயில்)
8. அயோத்தியாப்பட்டினம் - பேசும் இடம்
9. உடையாப்பட்டி - பேசும் இடம்

Readmore:www.dinamani.com

Thursday 21 November 2013

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

http://dinamani.com/latest_news/2013/11/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/article1903190.ece



தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செந்தில் குமார் ஐபிஎஸ், ராஜேந்திரன் ஐபிஎஸ், லலிதா லஷ்மி, ராமகிருஷ்ணன் ஐபிஎஸ், விமலா ஐபிஎஸ், நரேந்திரன் நாயர் ஐபிஎஸ், லஷ்மி ஐபிஎஸ், சரவணன் ஐபிஎஸ், ருபேஷ் குமார் மீனா ஐபிஎஸ், செல்வகுமார் ஐபிஎஸ், சிவக்குமார் ஐபிஎஸ், சோனல் சந்திரா ஐபிஎஸ், பெரோஸ் கான் அப்துல்லா ஐபிஎஸ், ஜெயந்தி ஐபிஎஸ், ஜோஷி நிர்மல் குமார் ஐபிஎஸ் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Readmore:www.dinamani.com

Friday 15 November 2013

கன மழை : சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

First Published : 16 November 2013 10:19 AM IST 

சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறியாத பல மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து, விடுமுறை என்ற அறிவிப்பை பார்த்து திரும்பிச் சென்றனர்.

Read more:www.dinamani.com

Wednesday 13 November 2013

மெரினா கலங்கரை விளக்கம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்குத் திறக்கப்படுகிறது.
ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்துவைக்கிறார்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பொதுமக்களுக்கு இலவசமாக திறந்துவிடப்படுகிறது. நாளை முதல் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

keywords:Tamil daily News | Tamilnadu newspaper

Tuesday 12 November 2013

ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்., தி.மு.க.வை மன்னிக்க மாட்டோம்



ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளை மன்னிக்க மாட்டோம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டித்தும், காமன்வெல்த் அமைப்பைக் கண்டித்தும் மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்ஜின் முன் நின்று மறியலில் ஈடுபட்ட வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈழத் தமிழரைக் கொன்றதன் மூலம் சர்வதேச குற்றவாளியாக இலங்கை அதிபர் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில், அங்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது சரியல்ல. ஆனால், அங்கு மாநாடு நடத்துவதன் மூலம் சர்வதேச குற்றவாளியான ராஜபட்சவைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் முயற்சியாக இந்தியாவே மறைமுகமாக மாநாட்டை நடத்துகிறது. பிரதமர் பங்கேற்காவிட்டாலும், அவரது அமைச்சர் பங்கேற்கிறார். ஜனநாயக மரபை மீறியதாக நைஜீரியா, பாகிஸ்தான், உகாண்டா, தென்னாப்பிரிக்கா, பிஜி தீவு ஆகியவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டன. ஆனால், பல லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை நீக்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுக்கு நிகராகப் போராடிய நோபல் பரிசு பெற்ற லெஸ்பின்டிட்டோ, காமன்வெல்த் மாநாட்டை அனைத்து நாடுகளும் புறக்கணித்தால் ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்கிறார்.
ஈழப் போரின்போது இந்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவி அளித்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இக் கட்சிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்.
காமன்வெல்த் மாநாடு நடப்பதால், ஈழத் தமிழர் பிரச்னை முடிந்துவிடாது. தமிழகத்தில் உள்ளோர் சாதி, மதம் பாராமல் தொடர்ந்து போராடுவோம்.
தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை அகற்ற அதிமுக அரசு நீதிமன்றத்தில் மனுச் செய்தது கண்டிக்கத்தக்கது. அதிமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானமும் முழுமையானதல்ல. இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலை குறித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நான்கு ஆண்டுக்குப் பிறகு கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுவரை அவர் எங்கிருந்தார்? இலங்கை தமிழர் படுகொலை குறித்த குறுந்தகடை கேலி செய்தவர்தான் கருணாநிதி என்றார்.
முன்னதாக, ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயிலில் இருந்து கட்சியினருடன் தண்டவாளம் வழியாக 2-வது பிளாட்பாரத்துக்கு வந்த வைகோ, போலீஸ் தடையை மீறி வைகை எக்ஸ்பிரஸ் எஞ்ஜின் முன் தண்டவாளத்தில் நின்றார். போலீஸார் தடுத்தும் வைகோ கட்சியினருடன் ரயில் முன்வந்தார். பின் மத்திய காங்கிரஸ் அரசையும், சோனியா காந்தி, மன்மோகன் மற்றும் காமன்வெல்த் அமைப்பையும் கண்டித்து கோஷம் எழுப்பினார்.
காலை 6.20 மணிக்கு தண்டவாளத்தில் நின்ற வைகோவை 6.40 மணிக்கு கைது செய்ய போலீஸார் வந்தனர். உடனே, அவர், உங்களிடம் தமிழ் ரத்தம்தானே ஓடுகிறது சிங்களவரிடமா ஊதியம் பெறுகிறீர்கள்? எனக் கடிந்து கொண்டார்.
பின்னர் தொடர்ந்து ரயில் முன் நின்று கோஷம் எழுப்பினார். அதன்பின், காலை 7.20 மணிக்கு அவரை மாநகர் துணை ஆணையர் தமிழ்ச்சந்திரன் தலைமையிலான போலீஸார் கைது செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர். அரசு டவுன் பஸ்ஸில் தொண்டர்களுடன் ஏறிச்சென்றார்.
இதையடுத்து, மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு.பூமிநாதன் தலைமையிலும், அவைத் தலைவர் சின்னச்செல்லம் தலைமையிலும் மறியலுக்கு முயன்று கைதாயினர். மதிமுக ரயில்வே தொற்சங்கத்தினர் மணி தலைமையில் கைதாயினர். மறியலில் ஈடுபட்டு 3 பெண்கள் உள்ளிட்ட 331 பேர் கைது செய்யப்பட்டு, தமுக்கம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

website:www.dinamani.com

வெளிநாட்டு பணம் வந்தது எப்படி? அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிக்கு மத்திய அரசு கேள்வி


வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் வந்தாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிக்கு மத்திய அரசு கேள்வியெழுப்பியுள்ளது. இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே மத்திய அரசு அனுப்பிய கேள்விகளுக்கு அக்கட்சி இன்னும் பதிலளிக்கவில்லை என்றார்.
இதனிடையே இந்த புகார் குறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தாங்கள் குற்றவாளி என்றால் இரட்டை தண்டனையை ஏற்க தயாராக இருக்கின்றோம். வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் இருந்து பணம் பெறுவது குற்றமல்ல. இது குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம் என்றார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து முறைக்கேடாக பணம் வந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி கட்சி வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள்  விளக்கம் அளிக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

website:www.dinamani.com

Sunday 10 November 2013

சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை

சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை

சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
சவூதி அரேபியாவில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட நிதாகத் சட்டத்தால் அங்கு பணியாற்றி வந்த இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி நிதாகத் சட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து 1.34 லட்சம் பேர் பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் தவிர மீதமுள்ள 12 லட்சம் இந்தியர்களின் வேலைவாய்ப்பு நிலைமை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உள்பட பல லட்சம் இந்தியர்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் அங்கு வேலை செய்ய முடியாமலும், தாயகம் திரும்ப முடியாமலும் அவர்கள் தங்கியுள்ள வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், அவர்கள் உணவு, தண்ணீரின்றி அவதிப்படுவதாக அங்கிருந்து திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வராவிட்டால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படும் ஆபத்து உள்ளது.
இதை உணர்ந்த கேரள அரசு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், வெளிநாடுவாழ் மலையாளிகள் விவகாரத்துறை மூலம் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத், ஜெட்டா, தமாம் ஆகிய இடங்களுக்கு ஆலோசனைக் குழுக்களை அனுப்பி உரிய ஆவணங்கள் இல்லாமல் தவிக்கும் மலையாளிகளை மீட்டு வர நடவடிக்கை எடுத்திருக்கிறது.
சவுதியிலிருந்து திரும்புபவர்களுக்கு இலவச பயணச் சீட்டு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ள கேரள அரசு, விரைவில் தனி விமானங்களையும் அனுப்ப திட்டமிட்டிருக்கிறது.
ஆனால், சவூதியில் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
எனவே, தமிழர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

keywords:Tamil daily News | Tamilnadu newspaper

Thursday 7 November 2013

10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது


10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பள்ளிகள் அவ்வாறு வற்புறுத்தினால் பெற்றோர்கள் இ-மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களை கல்வியாண்டின் இடையில்
பெற்றோர்களின் விருப்பமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்கி தனித்தேர்வர்களாக அவர்களை பொதுத்தேர்வு எழுத வலியுறுத்தக்கூடாது என ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலமாகவும், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டங்களிலும் பள்ளி மாணவர்களை எந்தக் காரணத்தாலும் தனித்தேர்வர் என விண்ணப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனியார் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களை மதிப்பெண்
குறைவாக பெற்ற காரணத்தால் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுமாறு மெட்ரிக் பள்ளிகள் வற்புறுத்துவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு இ-மெயில் மூலமó புகார்கள் வருகின்றன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் இடையில் பெற்றோர் விருப்பமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கூடாது. இந்த மாணவர்களை எந்தக் காரணம்கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணிப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது.
இந்த விதிகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்.
இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருக்கும் என்றால் கீழ்க்கப்பட்ட இ-மெயில் முகவரியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம்.
இ-மெயில் முகவரி:  dmschennai2010@gmail.com, எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செல்போன் எண்கள்: 94421-44401, 94435-74633.


Tuesday 5 November 2013

அதுதான் அஜீத்: ஆர்யா பெருமிதம்


அதுதான் அஜீத்: ஆர்யா பெருமிதம்


அஜீத், என்னை சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அஜீத் எப்போதும் என் பேவரைட். அவரது ஸ்டைலுக்கு நான் தீவிர ஃபேன். அவருடன் நடித்தபோது, சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார். அதே சமயம், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னுடன் அடித்த அரட்டையெல்லாம் ஒரு நல்ல நண்பரை எனக்கு ஆரம்பம் பெற்றுத் தந்துள்ளது.
அஜீத்துக்கு காயம் ஏற்பட்ட போது முழு டீமும் கலங்கிப்போச்சு. டூப் போடாம அஜீத் நடிச்சாரு. எதிர்பாராதவிதமா அந்த விபத்து நடந்துருச்சு. ஆனா ஒண்ணு சொல்லணும் அஜீத்தோட தில் மெய்சிலிர்க்க வச்சுது. படத்தில் என்னுடைய நடிப்பை அஜீத் பாராட்டியது அவருடைய பெருந்தன்மையை காட்டுது.
படத்துல தனக்கு இணையா இன்னொரு ஹீரோ நடிக்கிறது எந்த சூப்பர் ஸ்டாரும் ஏத்துக்க மாட்டாங்க. ஆனா அதை ஏத்துக்கிட்டது மட்டுமில்ல. எனக்கு முழு சப்போர்ட்டும் பண்ணினாரு. பட விளம்பரத்துல தன்னோட பெயரோடு என் பெயரும் வர வச்சாரு. அதுதான் அஜீத் என இவ்வாறு ஆர்யா கூறினார்.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

 

Monday 4 November 2013

விழுப்புரத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி


விழுப்புரத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே மின்னல் தாக்கியதில் ஐடிஐ மாணவன் நாகேஸ்வரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், திங்கட்கிழமை காலை வயல் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த நாகேஸ்வரன் மீது மின்னல் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தார்.

Thursday 31 October 2013

ஃபோனில் பேசிப் பேசி காதல் வளர்க்கும் மன்மதன்


ஃபோனில் பேசிப் பேசி காதல் வளர்க்கும் மன்மதன்

 

ஃபோனில் பேசிப் பேசி சிம்பு காதல் வளர்க்கப் போகிறாராம்.
சிம்பு, இப்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இரவும் பகலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் சிம்புவின் நண்பனாக சந்தானத்துடன் சேர்ந்து சூரியும் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சிம்பு எப்போதும் ஃபோனில் பேசிக்கொண்டிருப்பது மாதிரியான ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம்! இப்படி ஃபோனில் பேசப் பேச அப்படியே அவரது காதலும் வளருமாம்! இந்த தகவலை சிம்புவே டுவீட் செய்திருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் இந்தப்படத்தை சிம்புவே தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறாராம்.
அதைவிட முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். படத்தின் நாயகி யார் என்று இன்னும் முடிவாகாத நிலையில் சிம்பு யாருடன்தான் ஃபோனில் பேசுகிறார் எனத் தெரியவில்லை.
 keyword: Tamil News Paper | online tamil news

Tuesday 29 October 2013

ரூ.2 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயி

ரூ.2 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயி

தர்மபுரி அருகே ரூ.70 மின் கட்டணம் செலுத்தி வந்த விவசாயிக்கு திடீரென ரூ.2 லட்சம் பில் வந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஆல்ட்ரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி (40). விவசாயியான இவர் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணமாக ரூ.70 செலுத்தி வந்துள்ளார். கடந்த வாரம் அவரது வீட்டில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டது. அதில், ரூ.2 லட்சம் மின் கட்டணம் செலுத்தவேண்டும் எனவும், நவம்பர் 10ம் தேதிக்குள் செலுத்தவில்லை எனில் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் விவசாயி சின்னசாமிக்கு மின் வாரிய கணக்கீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னசாமி மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டு, சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு மாதம்தோறும் ரூ.70க்கும் குறைவாகத்தான் மின் கட்டணம் வரும். மேலும் எங்கள் வீட்டில் ஒரு பேன், ஒரு டி.வி, 2 குண்டு பல்பு மட்டுமே பயன்படுத்துகிறோம். தற்போது திடீரென மின் கட்டணம் லட்சக்கணக்கில் வந்துள்ளது. ஏதோ தவறு நடந்துள்ளது. இதை சரி செய்து நியாயமான கட்டணத்தை எனக்கு நிர்ணயிக்கவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். இதேபோன்று அதே ஊரை சேர்ந்த பலருக்கும் ஆயிரக்கணக்கில் பில் வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ ராமரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

Saturday 26 October 2013

விரைவில் மிகைமின் மாநிலமாகும் தமிழகம்

விரைவில் மிகைமின் மாநிலமாகும் தமிழகம்


தமிழகம் விரைவில் மிகைமின் மாநிலமாக மாறும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்வெட்டு இருக்கும் என்று சொன்னாலும் மின்வெட்டே இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் மின்சார நிலைமை குறித்து, சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மற்றும் ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் வெள்ளிக்கிழமை கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:
கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது ஆயிரத்து 302 மெகாவாட் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. அதற்கடுத்த ஐந்தாண்டுகளில் திமுக ஆட்சியில் வெறும் 561 மெகாவாட் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. பின்னர், 2001-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக முதல்வராக இருந்த போது, 2 ஆயிரத்து 518 மெகாவாட் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. காற்றாலை, அனல் மின் நிலையங்கள் சிறப்பாகச் செயல்பட்டன.
ஆனால், 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வெறும் 206 மெகாவாட் அளவுக்கே கூடுதல் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. 2007- ஆம் ஆண்டு இறுதியிலிருந்தே நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்து, 2008- ஆம் ஆண்டிலிருந்து மின் பற்றாக்குறை தமிழகம் முழுவதும் தலைவிரித்து ஆட ஆரம்பித்தது.
அரசு எடுத்த நடவடிக்கைகள்: மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். 600 மெகாவாட் திறனுடைய மேட்டூர் அனல் மின் திட்டம், வட சென்னை அனல் மின் நிலையத் திட்டத்தின் நிலை-2ன் முதல் அலகு (300 மெகாவாட்) ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தொடர்ந்து கிடைத்து வருகிறது. டிசம்பர் முதல் 600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
600 மெகாவாட் திறனுடைய வடசென்னை அனல் மின் நிலைய நிலை 2-ன் மூலம் 350 முதல் 450 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கிறது. அடுத்த மாத இறுதியில் முழு அளவில் மின்சாரம் கிடைக்கும். வட சென்னை வல்லூரில் 500 மெகாவாட் திறனுடைய மூன்று அலகுகளில் இரண்டு அலகுகள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மூன்றாவது அலகு அடுத்த ஆண்டு மே முதல் உற்பத்தியைத் தொடங்கும்.
புதிய அனல் மின் திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதன் மூலம் இப்போது கூடுதலாக ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதைத் தவிர மத்திய கால அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு 500 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு ஜூன் முதல் பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மின்வெட்டே இல்லாத நிலை: தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சியால் மேலும் 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெருமளவு சத்தீஸ்கர் மற்றும் ஒடிஸா மாநிலங்களிலிருந்து பெறப்படும்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் வழித் தடங்கள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் நாம் கொள்முதல் செய்துள்ள மின்சாரத்தை முழுமையாகப் பெற முடியும். இந்த ஆண்டு பருவமழை சிறப்பாக இருக்கும் காரணத்தால் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் மூலமான மின் உறபத்தியும் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்றிருந்த நிலைமை மாறி, இப்போது அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் நடைமுறைப்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஓர் எச்சரிக்கை உணர்வுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், வாக்குறுதி கொடுத்து விட்டு தவறிவிடக் கூடாது என்பதற்காகவும் மின்வெட்டு இருக்கும் எனச் சொல்கிறோம். ஆனால், மின்வெட்டே இல்லாமல் மின்சாரத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
எனவே, வெகு விரைவில், மிக விரைவில் தமிழகம் மின் மிகை மாநிலமாக ஆக்கப்படும். மின்சார உற்பத்தியில் இப்போது 99 சதவீதம் சாதித்து விட்டோம். இன்னும் ஒரு சதவீதம் தான். இந்த ஆண்டு இறுதிக்குள் அதையும் சாதித்து விடுவோம் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

 

Sunday 20 October 2013

வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு


வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

 

வங்கக் கடலில் தென் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் அடுத்த இரு தினங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது.
இப்போது வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் வாய்ப்புள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தென் வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் நிலை கொண்டுள்ளதால் இது மேலும் வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாள்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்): திண்டிவனம், மதுரை - 90, பாபநாசம், தஞ்சாவூர் - 80, நத்தம், அறந்தாங்கி - 70, ஒகேனக்கல், பூந்தமல்லி - 60, கிருஷ்ணகிரி - 50, வேதாரண்யம், பொள்ளாச்சி, காரைக்குடி, பாளையங்கோட்டை, மதுராந்தகம், கோவை, ஆத்தூர், சோழவந்தான் - 40, தளி, புதுச்சேரி, ஸ்ரீவைகுண்டம், நாகர்கோயில், சங்கரன்கோயில், குளச்சல், சிதம்பரம், அரக்கோணம், தாம்பரம் - 30, செஞ்சி, மன்னார்குடி, சென்னை, செய்யாறு, சத்தியமங்கலம், வந்தவாசி, கூடலூர், செம்பரம்பாக்கம், மேட்டுப்பாளையம், ராமேசுவரம், செங்கோட்டை, விழுப்புரம், ஆரணி, பட்டுக்கோட்டை, நெய்வேலி, ஸ்ரீபெரும்புதூர் - 20, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, ஏற்காடு, ஆண்டிப்பட்டி, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, அரூர், பெருந்துறை, கொடைக்கானல், தென்காசி, பண்ருட்டி, திருப்பத்தூர், மகாபலிபுரம், கல்லணை, சீர்காழி, வால்பாறை, தூத்துக்குடி, திருத்தணி - 10.

Thursday 10 October 2013

நிரூபித்தார் யுவராஜ்; இந்தியா அபார வெற்றி

நிரூபித்தார் யுவராஜ்; இந்தியா அபார வெற்றி

நெருக்கடியைக் குறைக்கத் தேவையில்லை; நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் நிரூபித்தார் யுவராஜ் சிங்.
ராஜ்கோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்திருந்த இமாலய இலக்கான 202 ரன்களை 19.4 ஓவர்களில் எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
நீண்ட நாள்களுக்குப் பின் களமிறங்கிய யுவராஜ், 35 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவர், இந்த ஆட்டத்தில் 5 சிக்ஸர்களையும் 8 பவுண்டரிகளையும் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
அணியின் வெற்றிக்கான ரன்னை அடிக்கும் வாய்ப்பைப் பெற்ற தோனி, ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார்.
தொடக்க வீரர் ரோஹித் 8 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், பதற்றமின்றி விளையாடிய தவன் 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களில் ரெய்னா 19 ரன்களும், கோலி 29 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள், தொடக்கத்தில் இந்திய வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும், யுவராஜ் வருகைக்குப் பின் அமைதியானார்கள்.
இத்தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் முக்கியப் பங்கு வகிப்பார் என்பது இந்த ஆட்டத்திலேயே நிரூபிக்கப்பட்டது. சந்தேகமின்றி, யுவராஜ் சிங்கே ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
ஃபிஞ்ச் விளாசல்: முன்னதாக, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அனுபவம் பெற்ற ஃபிஞ்ச், இந்தியாவுக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தார். மற்றொரு தொடக்க வீரர் மேடின்சன் 34 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டிக்காக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல், இந்த ஆட்டத்தில் 4 சிக்ஸர்களை விளாசி, 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நங்கூரம் போன்று நிலைத்து ஆடிய ஃபிஞ்ச் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். அரை சதத்துக்குப் பிறகு அவரின் ஆட்டத்தின் வேகம் அதிகரித்தது. இறுதியில் 89 ரன்கள் எடுத்திருந்தபோது அவரை வினய் குமார் ஆட்டமிழக்கச் செய்தார். 52 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.
இந்தியத் தரப்பில் பிரவீன் குமார், வினய் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா, தன் பங்குக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
சிறந்த தொடக்கம்: இந்த வெற்றியின்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கு இடையே யான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் 13-ம் தேதி புணேவில் நடைபெறுகிறது.
சுருக்கமான ஸ்கோர்
ஆஸ்திரேலியா -201/7
(ஃபிஞ்ச் 89, மேடின்சன் 34, வினய் குமார் 3வி/26)
இந்தியா - 19.4
ஓவர்களில் 202/4
(யுவராஜ் 77*, தவன் 32, மெக்கே 2வி/50)

 

Thursday 19 September 2013

சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று ஒடாகோ அணிக்கு 2-வது வெற்றி

சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று ஒடாகோ அணிக்கு 2-வது வெற்றி

 

சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று ஆட்டத்தில் கந்துரதா மரூன்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒடாகோ அணி வீழ்த்தியது. இதன்மூலம் தகுதிச்சுற்றில் ஒடாகோ அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் விளையாட தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கந்துரதா மரூன்ஸ் (இலங்கை) மற்றும் ஒடாகோ (நியுசிலாந்து) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஒடாகோ அணி டாஸ் வென்று, பீல்டிங்கை தேர்வு செய்தது. கந்துரதா மரூன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தரங்கா மட்டும் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
அதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஒடாகோ அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த டென் டெஸ்சேட் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.
இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் ஒடாகோ அணி 18 ஓவரிலேயே 4 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் தகுதிச்சுற்றுப் போட்டியில் தொடர்ந்து 2ஆவது வெற்றியை அந்த அணி பதிவு செய்தது.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

news:dinamani.com

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: சிந்து, பவார் முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: சிந்து, பவார் முன்னேற்றம்

 

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்து வரும் பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் 2ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆடவர் பிரிவில் ஆனந்த் பவார், அஜய் ஜெய்ராம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இத்தொடரில் சாய்னா நெவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப் ஆகிய முன்னணி வீரர்கள் பங்கேற்கவில்லை.
மகளிர் முதல் சுற்றில் விளையாடிய சிந்து 21-12, 21-13 என்ற நேர் செட்களில் ஜப்பானைச் சேர்ந்த யுகினோ நகாயை வீழ்த்தினார். மகளிர் 2ஆவது சுற்று ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
ஆடவர் சுற்றில் ஆனந்த் பவார் 21-17, 7-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவைச் சேர்ந்த சோனி த்வி கன்கோரோவை போராடி தோற்கடித்தார். லண்டன் ஒலிம்பிக்கில் கன்கோரா வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து கிராண்ட்ப்ரீயில் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த் 22-20, 22-24, 21-18 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஷோ சசாகியை வென்றார். இவர், தனது அடுத்த சுற்றில் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள சீனாவின் லாங் செனை எதிர்கொள்ள உள்ளார்.
அஜய் ஜெய்ராம், 21-11, 21-18 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் தியென் சென் செüவை தோற்கடித்தார்.
மற்ற இந்திய வீரர்களான செüரவ் வர்மா மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்தனர்.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

தொடரை கைப்பற்றுமா இந்தியா ஏ?

தொடரை கைப்பற்றுமா இந்தியா ஏ?

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணியுடன் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி வியாழக்கிழமை மோத உள்ளது.
இந்தியா ஏ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு இடையே மூன்று ஒரு நாள் ஆட்டத்தொடர் பெங்களூரில் நடைபெற்று வருகின்றன.
முதல் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியும், 2ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணியும் வெற்றிப் பெற்றன. இந்நிலையில் 3ஆவது மற்றும் இறுதி ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இரு அணி வீரர்களும் தொடரை கைப்பற்றும் நோக்கத்துடன் விளையாடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும்.
மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணியில் கார்டர், பௌல், கும்மின்ஸ் போன்றோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியா ஏ அணியில் கேப்டன் யுவராஜ் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பந்துவீச்சிலும் வினய்குமார் மட்டுமே தொடர்ந்து விக்கெட் எடுத்து வருகிறார். கடந்த ஆட்டத்தில் பீல்டிங் சொதப்பலாக இருந்ததை யுவராஜ் ஒப்புக்கொண்டார். எனவே, இந்த ஆட்டத்தில் அந்த தவறுகளை திருத்தி விளையாடினால் இந்தியா ஏ அணி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper

 

சச்சினுடன் ஓய்வு குறித்து ஆலோசிக்கவில்லை


சச்சினுடன் ஓய்வு குறித்து ஆலோசிக்கவில்லை

 

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன், அவரது ஓய்வு குறித்து ஆலோசிக்கவில்லை என்று தேர்வுக் குழுவின் தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சச்சின் 198 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார். மேலும் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடினால், 200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் புரிவார்.
வரும் நவம்பர் மாதம், மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் சச்சின் விளையாடினால் அவர் சாதனை புரிவார் என்றும், இத்தொடருடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்டு வருகின்றது. ஒருநாள் போட்டியில் இருந்து அவர் ஏற்கெனவே ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர் சச்சினை சந்தித்ததாகவும், அப்போது அவரது ஓய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்த உறுப்பினர் பாட்டீல் என்றும் கூறப்பட்டது.
இது குறித்து பிடிஐ செய்தியாளரிடம் பாட்டீல் கூறியது:
சச்சினை சந்திப்பது எப்போதும் சிறந்தது. ஆனால், கடந்த 10 மாதங்களாக அவரை நான் சந்திக்கவில்லை. அவரை தொடர்புகூட கொள்ளவில்லை. அவரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. ஓய்வு குறித்து அவரிடம் ஆலோசிக்கப்பட்டதாக வந்த செய்திகள் அபத்தமானது என்று தெரிவித்தார்.
பிசிசிஐ மறுப்பு: சச்சினிடம் ஓய்வு பெறுமாறு பாட்டீல் கூறியதாக வெளிவந்த செய்திகளை பிசிசிஐ புதன்கிழமை மறுத்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ராஜீவ் சுக்லா கூறுகையில், "ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் உண்மை இல்லை. இது குறித்து சச்சின் மற்றும் பாட்டீலிடம் பேசினோம். இருவரிடையேயும் அதுபோன்ற (ஓய்வு) பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று தெரிய வந்தது' என்று தெரிவித்தார்.

keyword:Tamil daily News | Tamilnadu newspaper