Thursday 28 November 2013

மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி


தமிழகத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டில்  அண்மையில் பெய்த மழையின் காரணமாக,  31.10.2013 அன்று  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த  சுந்தரம் மகன் சக்திவேல், மின்சாரம் தாக்கியதில்  உயிரிழந்தார்.
1.11.2013 அன்று மதுரையைச் சேர்ந்த சங்கையா மனைவி தில்லையம்மாள்; 4.11.2013 அன்று விழுப்புரம் மாவட்டம், நவமால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன் மகன் நாகேஸ்வரன்;  நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரபாணி மனைவி பானுமதி; திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியக்காள்; அதே மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மகன் பெரியண்ணன் - ஆகியோர்  இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். 
10.11.2013 அன்று கடலூர் மாவட்டம், சான்றோர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த  கோவிந்தராஜ் மனைவி சாந்தி; 16.11.2013  அன்று  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜி என்கிற விஜியா சாமுண்டீஸ்வரி; விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சுனன்   மனைவி அய்யம்மாள் ஆகியோர்  வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
16.11.2013 அன்று  விழுப்புரம் மாவட்டம்,  திண்டிவனம் வட்டம், மரக்காணம் கிராமத்தைச் சேர்ந்த அரிராமர் மகன் சதீஷ்குமார் என்கிற ஏழுமலை மீது  மரம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Readmore:www.dinamani.com

No comments:

Post a Comment