Monday 25 November 2013

திருச்சியில் வழக்குரைஞர்கள் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு

First Published : 25 November 2013 12:48 PM IST
திருச்சியில் வழக்குரைஞர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். திருச்சி நீதிமன்றத்தின் முன்பு 300க்கும் மேற்பட்டோர் மேற்கொண்ட இந்த சாலைமறியலால் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் சுமார் 45 நிமிடங்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்குரைஞர்கள் ஆரோக்கியதாஸ், பொன்முருகன், செல்லத்துரை இவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த சாலைமறியல் நடைபெற்றது.
அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் உரிய தீர்வு காணப்படும் என்றும் கூறப்பட்டதை அடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

Readmore:www.dinamani.com

No comments:

Post a Comment