தமிழகத்தில் திடீரென ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழகத்தில் நவம்பர் மாதம் எதிர்பாராத மற்றும் திடீரென ஏற்பட்ட மின் தட்டுப்பாடு குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
2011ஆம் ஆண்டு நான் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் சுமார் 4000 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது, தமிழகத்துக்கு வரும் மின் பரிமாற்றத் தடங்களை அதிகரித்து, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற வழி செய்யுமாறு உங்களுக்கு கோரிக்கை வைத்தேன். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. எனினும், தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, மின் தட்டுப்பாட்டை குறைத்து வந்தது.
நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லாத நிலை இருந்தது. இதனால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தன.
ஆனால், திடீரென தமிழகத்தில் மின் நிலைமை மோசமடைந்தது. மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்தது. சில மின் உற்பத்தி அலகுகளில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடை பட்டது. சென்னை மின் உற்பத்தில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதுபோன்று ஒரே நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவங்களால், தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை எற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனை தவிர்க்க, தமிழக மக்களின் நலனுக்காக, தமிழகத்தில் உள்ள மத்திய நிறுவனங்களின் கீழ் வரும் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியை அதிகரித்து, தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க உதவிடுமாறு உத்தரவிட வேண்டுகிறேன். இந்த பிரச்னையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தால், தமிழகம் இருளில் மூழ்கும் அபாயத்தில் இருந்து காக்கலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
Readmore:www.dinamani.com
No comments:
Post a Comment