Friday 22 November 2013

ஏற்காடு இடைத்தேர்தல்: நவம்பர் 28-இல் முதல்வர் பிரசாரம்


இடைத்தேர்தல் நடைபெறும் ஏற்காடு தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 28-ஆம் தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.
ஏற்காடு தொகுதியில் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு  அதிமுக வேட்பாளர் பி.சரோஜா உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக இடையே நேரடியான போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு பெரிய கட்சிகளைத் தவிர இங்கு போட்டியிடும் 9 வேட்பாளர்களும் சுயேச்சைகள்.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் ஏற்கெனவே தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பயண விவரத்தை அதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அதன் விவரம்:
1. மின்னாம்பள்ளி - பேசும் இடம் (வழி: காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம்.பெருமாபாளையம், டோல்கேட்)
2. வெள்ளாளகுண்டம் பிரிவு - பேசும் இடம் (வழி: காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி பிரிவு)
3. வாழப்பாடி பஸ் நிலையம் - பேசும் இடம் (வழி: பேளூர் சாலைப் பிரிவு, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி)
4. பேளூர் - கருமந்துறை பிரிவு சாலை, எம்.ஜி.ஆர்.சிலை அருகில் - பேசும் இடம் (வழி: பள்ளத் தாதனூர், நடுப்பட்டி)
5. நீர்முள்ளிக்குட்டை - பேசும் இடம் (வழி: ராஜாபட்டினம், பூசாரிப்பட்டி, அனுப்பூர் பிரிவு)
6. கூட்டாத்துப்பட்டி - பேசும் இடம் (வழி: சர்க்கார் நாட்டார் மங்கலம், ஏ.என்.மங்கலம், செல்லியம்பாளையம், குள்ளம்பட்டி பிரிவு)
7. வலசையூர் - பேசும் இடம் (வழி: ராமர் கோயில்)
8. அயோத்தியாப்பட்டினம் - பேசும் இடம்
9. உடையாப்பட்டி - பேசும் இடம்

Readmore:www.dinamani.com

No comments:

Post a Comment